×

முகிலன் மீது 500 பக்க குற்றப்பத்திரிகை

சென்னை:  சமூக ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மாயமானார். கடந்த ஜூலை மாதம் ஆந்திர மாநிலம் திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை ஆந்திர போலீசார் கைது செய்து தமிழக காவல்துறையிடம்  ஒப்படைத்தனர்.முகிலன் மீது ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை வழக்கு நிலுவையில் இருந்ததால் அவ்வழக்கில் அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். முகிலனுக்கு உடந்தையாக செயல்பட்டதாக விஸ்வநாதன் என்பவரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை முடிக்கப்பட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார், முகிலன் மற்றும்  விஸ்வநாதன் மீது 500 பக்க குற்ற பத்திரிகையை கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர்.

Tags : Mukhilan, Sheet
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...