×

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறும் அபிஜித் தம்பதிக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார திட்டங்களை வகுத்தமைக்காக 2019ம் ஆண்டிற்கான ‘நோபல் பரிசு’ அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி தம்பதிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து அறிக்கை:பொருளாதார மேதை அபிஜித் பானர்ஜி மற்றும் அவருடைய மனைவி எஸ்தர் டுப்ளோ ஆகிய இருவரும் இயக்குநர்களாக உள்ள ஜே-பால் நிறுவனமும் தமிழ்நாடு அரசும் 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை  ஏற்படுத்திக்கொண்டு, இதுவரை 7 துறைகளில் 15 ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

அபிஜித் பானர்ஜி மற்றும் அவர் மனைவி எஸ்தர் டுப்ளோ உட்பட உலகப் புகழ் பெற்ற பல்வேறு பொருளாதார அறிஞர்களின் கருத்துகளைப் பெற்று  தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்கான திட்டங்களைத் தீட்டி வருகிறது. அபிஜித் பானர்ஜி, அவர் மனைவி எஸ்தர் டுப்ளோ ஆகிய இருவருக்கும் ‘பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு’ கிடைத்ததற்கு தமிழக மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும்  மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாகா தலைவர் வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Tags : Abhijit ,CM , Nobel Prize ,Economics, Abhijit,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...