×

‘பிக்பாக்கெட்’ திருடன் செய்வதை போல மோடி பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்புகிறார்: ராகுல் காந்தி கடும் தாக்கு

யவத்மால்: வரும் அக்டோபர் 21ம் ேததி நடைபெறவிருக்கும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நேற்று யவத்மாலில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:பிரதமர் மோடி சந்திரனைப் பற்றியும், ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கப்பட்டதையும் பற்றி பேசுகிறார். ஆனால், விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் எதிர்க்கொண்டுள்ள வேலையின்மை போன்ற பிரச்னைகள் பற்றி பேசுவதில்லை.  பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றால் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் முதுகெலும்பு ஒடிந்து விட்டது.மோடி அரசு பதவியில் இருக்கும்வரை வேலையில்லாப் பிரச்னை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். 6 மாத காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் அதிகரிக்கும். பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் அதானி மற்றும் அம்பானியின்  ஒலிபெருக்கியாக இருக்கிறார். ஒரு பிக்பாக்கெட், தான் திருடுவதற்கு முன்பு மக்களின் கவனத்ைத திசை திருப்புவதைப் போல, சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு உங்கள் பணத்தை கொடுப்பதற்காக பிரதமர் மோடியும் பிரச்னைகளில் இருந்து  உங்கள் கவனத்தை திசை திருப்புகிறார்.

நாட்டின் பொருளாதாரத்தை நடத்திச் செல்வது தொழிலதிபர்கள் அல்ல. விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர தொழில்களை வைத்துதான் நாட்டின் பொருளாதாரம் இருக்கிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் பிரான்ஸ் சென்று ரபேல் போர் விமானத்துக்கு பூஜை செய்துள்ளார். ஆனால் ரபேல் ஒப்பந்தத்தில் 35,000 கோடி சுருட்டப்பட்டுள்ளது. மீடியாக்கள் இதைப் பற்றி எழுதாது. காரணம் அவை  அனைத்தும் தொழிலதிபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. மோடியை பற்றி பிரசாரம் செய்வதற்காக உங்களுடைய பணம் மீடியாக்களுக்கு கொடுக்கப்படுகிறது.இந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண மகாராஷ்டிரா மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Tags : Rahul Gandhi ,Modi ,telephone thief , pickpocket ,telephone ,problems, Rahul Gandhi
× RELATED நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு...