சார்கிதாத்ரி: ‘‘காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பாக இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் காங்கிரஸ் வதந்தியை பரப்பி வருகிறது,’’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். அரியானாவில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நேற்று அவர், இம்மாநிலத்தில் உள்ள சார்கிதாத்ரி பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: இந்த மாநிலத்தில் ஊழலற்ற, வெளிப்படைத்தன்மையான ஆட்சியை அளித்து வரும் பாஜ.வுக்கு மீண்டும் வாக்களித்து ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் அரசியலில் நுழைந்துள்ளார். அவர் பாஜ வேட்பாளராக சார்கிதாத்ரி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெற செய்யுங்கள். அரியானா மாநில பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்கள் திறமையை நிருபித்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் காங்கிரஸ் வதந்தியை பரப்பி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
`டங்கல்’ பார்த்த சீன அதிபர்
Tags : Modi ,Kashmir , Kashmir ,special status ,Prime Minister ,Modi's,