சென்னை: சென்னை அண்ணாநகரில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் அனுமதியின்றி, அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 31 ஆயிரம் சதுர அடி நிலத்தை காலி செய்யும்படி மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கிளப் நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.