×

தூத்துக்குடி-பெங்களூரு புதிய விமான சேவை தீபாவளி முதல் மீண்டும் துவக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கடந்த 2004 ஏப்ரல் 1ம்தேதி முதல் வெற்றிகரமாக சென்னைக்கு விமான போக்குவரத்து துவக்கப்பட்டு தற்போது வரையில் சிறப்பாக நடந்து வருகிறது. பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதில் விமானப் போக்குவரத்து சேவை அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் முதலில் ஒரு முறை சேவை மட்டும் துவக்கப்பட்டு தற்போது தினமும் சென்னை தூத்துக்குடி, தூத்துக்குடி சென்னை என 10 சேவைகள் நடந்து வருகிறது.

மேலும் இந்த விமான நிலையத்தில் பன்னாட்டு விமான நிலையங்களை போல செயல்பட விரிவாக்க பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு இரு தனியார் நிறுவனங்கள் மூலம் தினமும் காலை முதல் மாலை வரையில் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பெங்களூருவிற்கு விமான சேவையை துவக்கியது. சுமார் ஒரு மாத காலம் மட்டுமே அந்த சேவை நீடித்தது.

இந்நிலையில் மீண்டும் வரும் தீபாவளி தினத்தன்று (27-ம் தேதி) இன்டிகோ நிறுவனம் சார்பில் தூத்துக்குடி-பெங்களூரு இடையே புதிதாக விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த விமானம் காலை 7.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் விமானம் 9.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இதுபோல் பெங்களூரில் இருந்து 5.45 மணிக்கு புறப்படும் விமானம் 7.30 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bangalore ,Tuticorin ,airline ,Diwali Diwali , Tuticorin-Bangalore, New Airlines, Diwali
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...