×

10 ஆண்டுக்கு முன்பு மர்மச்சாவு: மாணவன் உடல் தோண்டி எடுப்பு.... திருவனந்தபுரம் அருகே பரபரப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே பரதனூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன்  ஆதர்ஷ் (13). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.  கடந்த 2009 ஏப்ரல் 5ம் தேதி பால் வாங்குவதற்காக சென்றார். அதன் பிறகு வீடு  திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயன் பாங்கோடு போலீசில்  புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதர்ஷை தேடி வந்தனர். இந்த  நிலையில் மறுநாள் காலை அந்த பகுதியில் வயலை ஒட்டிய ஒரு குளத்தில் ஆதர்ஷ்  பிணமாக கிடந்தார். இந்த தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து மாணவனின் உடலை கைப்பற்றி திருவனந்தபுரம் அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் ஆதர்ஷின் தலையின் பின்பகுதியில் அடிபட்டதால் இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆதர்ஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தவிர பிரேத பரிசோதனை அறிக்யைில்  நுரையீரலுக்குள் தண்ணீர் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது ஆதர்ஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை அதிகரித்தது. இதையடுத்து போலீசார் குளத்தில்  பரிசோதித்தபோது மண்வெட்டியின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. குளத்தின் அருகே மாணவனின் உடைகளும் காணப்பட்டன. அந்த சமயத்தில் நல்ல மழை  பெய்திருந்தது. ஆனால் உடைகள் நனையாமல் காணப்பட்டன. ஆகவே யாராவது சிறுவனை  அடித்து கொலை செய்து குளத்தில் உடலை வீசி சென்று இருக்கலாம் என்று உறவினர்கள், பொது மக்கள் கருதினர்.

இதையடுத்து இந்த வழக்கு  குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து வழக்கு  கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் ஆதர்ஷின் மரணம் குறித்து  போலீசார் சரியான முறையில் விசாரிக்கவில்லை என்று கூறி அந்த பகுதியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக டிஜிபிக்கும் புகார்கள்  அனுப்பப்பட்டன. இதையடுத்து மாணவன் சாவு குறித்து மீண்டும் விசாரிக்க  குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். ஆதர்ஷ் புதைக்கப்பட்ட இடத்தில் உடல்  பாகங்களை தோண்டி எடுத்து மீண்டும் பரிசோதிக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி  நேற்று தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் ஆதர்ஷ் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் உடல் பகுதிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆதர்ஷ் ஹோமோசெக்ஸ்க்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அப்பகுதியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சிலர் குறித்த தகவலையும் பொதுமக்கள் போலீசுக்கு அளித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags : Marmachau ,parabharam ,Trivandrum. , Marmachau, student body digging
× RELATED 10 நிமிடம் முன்னதாகவே புறப்படும்...