திருச்செந்தூர்: திருச்செந்தூரில் 16 வயது சிறுமியிடம் அத்துமீறிய காவலர் சசிகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் சிறுமி பேசிக்கொண்டிருந்ததை புகைப்படம் எடுத்து சசிகுமார் பணம் கேட்டு மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரி பேரில் அந்த காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.