திருச்சி: மதுரையில் 1,500 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் முருகனுக்கு தொடர்பா என விசாரணை நடைபெறுகிறது. பிப்ரவரி 18 ஆம் தேதி கோபிநாத் என்பவரின் அடகுக் கடையில் 1,500 சவரன் நகை மற்றும் ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. மதுரை தனிப்படை போலீசார் திருச்சியில் முகாமிட்டு முருகனின் கூட்டாளி சுரேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.