×

திருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலர் மீது புகார்

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலர் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. இதுவரை அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. திருச்செந்தூர் அருகே உள்ள ராணிமகாராஜாபுரத்தை சேர்ந்த வாலிபரும், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் கடந்த 10ம் தேதி காலையில் வனதர் பகுதி செல்லும் வழியில் நின்று பேசி கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அவ்வழியாக வந்த திருச்செந்தூர் காவல்நிலைய காவலர் சசிகுமார் இருவரையும் செல்போனில் படம் பிடித்து 10 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வாலிபர் பணம் எடுக்க சென்றதாகவும் அப்போது தனிமையில் இருந்த சிறுமியிடம் காவலர் சசிகுமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் நேற்றிரவு திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி காவலரை காப்பாற்றும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட காவலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர். இந்த மனுவை ஏற்று மனு ரசீது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்குப்பதிவு செய்ததற்கான நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


Tags : Tiruchendur , Thiruchendur, little girl, sexual harassment, guard, complaint
× RELATED திருச்செந்தூர் நகராட்சியில்...