×

சொத்துக்காக சொந்த தம்பி, தம்பி மனைவியை கொன்ற அக்கா: கொலையில் ஈடுப்பட்ட கண்ணமாள் மற்றும் அவரது மருமகனுக்கு அக்.25-ம் தேதி வரை சிறை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் இரட்டைக் கொலை வழக்கில் கண்ணம்மாள், மருமகன் நாகேந்திரனுக்கு அக்டோபர் 25-ம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தம்பி, தம்பி மனைவியை கொன்று வீட்டுக்கு பின் புதைத்ததாக கண்ணம்மாள் மீது வழக்கு தொடரப்பட்டது. இரட்டைக் கொலையில் கண்ணம்மாளின் மருமகன் நாகேந்திரனுக்கும் தொடர்பிருப்பதாக போலீசார் குற்றம் சாட்டினர். சொத்துக்கு ஆசைப்பட்டு தம்பியையும் தம்பி மனைவியையும் தலையில் அம்மிக் கல்லைப் போட்டுக் கொன்றதாக கண்ணம்மாள் மீது வழக்கு தொடரப்பட்டது. மதுரையை சேர்ந்த செல்வராஜ் என்பவர், தனது மகனின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக, வெள்ளக் கோவிலில் உள்ள தனது சகோதரி கண்ணமா வீட்டுக்கு, மனைவியுடன் காரில் சென்றுள்ளார்.

அவர்கள் சென்ற கார் கரூர் - மதுரை புறவழிச் சாலையில் சுக்காலியூர் அருகே நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. மகன் திருமணத்திற்கான அழைப்பிதழ் வைக்க வந்த செல்வராஜ் மற்றும் அவரது மனைவியை, கண்ணம்மா கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் இருவரின் சடலத்தையும் வீட்டிற்கு பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளார். கண்ணம்மா, அவரது மகள் மற்றும் மருமகனை கைது செய்து தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தான் மட்டுமே கொலை செய்ததாக கண்ணம்மா கூறியிருந்தார். கண்ணம்மாவால் இரண்டு பேரை கொலை செய்து புதைப்பது சாத்தியமில்லாத செயல் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்களையும் தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. புதைக்கப்பட்ட செல்வராஜ், வசந்தாமணி ஆகியோரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags : brother , Man, murdered, brother,his wife, property
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...