சென்னை: ஒரு மகனுக்காக இன்னொருவரின் மகளை கொன்றுவிட்டீர்கள் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பேனர் ஜெயகோபாலின் ஜாமீன் மனு விசாரணையில் உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயகோபால் ஜாமீன் மனுவுக்கு பதில்தர அரசு அவகாசம் கேட்டதால் அக்.17 ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.