கரூர்: கரூர் மாவட்டம் கடவூரில் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் காளியப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். வாழ்வார்மங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் காளியப்பனை கைது செய்து வஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டா பெயர்மாற்றம், வாரிசு சான்று வழங்க பொன்னுசாமி என்பவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக காளியப்பன் மீது புகார் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.