நாமக்கல்: நாமக்கல் கிரீன்பார்க் பள்ளியில் 4 நாளாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு பெற்றது. நாமக்கல் மாவட்டம் கிரீன் பார்க் பள்ளியில் 4-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கிரீன்பார்க் பள்ளியின் நீட் பயிற்சி மையத்தில் சோதனை நடைபெற்றது. வருமான வரி சோதனையில் ரூ.150 கோடி மதிப்பிலான ஆவணங்கள், ரூ.30 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.