திருப்பூர்: வெள்ளகோவில் அருகே கொலை செய்து புதைக்கப்பட்ட செல்வராஜ், வசந்தாமணி ஆகியோரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. செல்வராஜின் சகோதரி கண்ணம்மாள் வீட்டு பின்புறம் புதைக்கப்பட்ட உடல்களை போலீஸ் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பாக கண்ணம்மாள், அவரது மகள் பூங்கொடி, மருமகன் நாகேந்திரன் மற்றும் இளங்கோ என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.