×

புதுச்சேரி புதுக்குப்பத்தில் சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்கள் இடையே மோதல்: துப்பாக்கிச்சூடு நடத்தி கலைத்த காவல்துறை

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த புதுக்குப்பத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக வீராம்பட்டினம், நல்லவாடு கிராம மீனவர்கள் இடையே நீண்ட நாளாக மோதல் ஏற்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் நல்லவாடு மீனவர்களுடைய வலைகளை வீராம்பட்டினம் மீனவர்கள் எரித்துள்ளனர். இது தொடர்பாக தவலகுப்பம் போலீசார் 2 பேரை கைது செய்தனர். இந்நிலையில்,  நல்லவாடு-வீராம்பட்டினம் மீனவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, வலை போடுவதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, மீனவர்கள் நடுக்கடலில் மோதலில் ஈடுபட்டதால், மோதலை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் அப்பகுதியில்  பலத்த பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இரு கிராம மீனவர்களும் நடுக்கடலில் கத்தியுடன் மோதிக்கொண்டதில் 2 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : fishermen ,Conflict ,Puducherry ,Puducherry Police , Fishermen clash over use of shrinkage in Puducherry: Puducherry Police
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...