புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த வீராம்பட்டினம், நல்லவாடு கிராம மீனவர்கள் நடுக்கடலில் மோதிக் கொண்டதில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். சுருக்கு வலை பயன்படுத்துவதில் இரு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மோதலை அடுத்து புதுகுப்பத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீராம்பட்டினம், நல்லவாடு கிராம மீனவர்களின் மோதலை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.