கோவை: கோவை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு ஷார்ஜாவுக்கு ஏர் அரேபியா விமானம் செல்ல தயாராக இருந்தது. விமானத்தில் ஏற வந்த பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டது. இதில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த துர்க்கால் ரசித் (23) என்பவரின் பேக்கில் 6.6 கிலோ கஞ்சா இருந்தது. அவரிடம் சுங்க துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, ஷார்ஜாவில் கஞ்சாவுக்கு அதிக விலை கிடைப்பதால், மூலிகை இலை எனக்கூறி கஞ்சா கடத்த முயன்றுள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.