நாங்குநேரி: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மூலக்கரைப்பட்டி பகுதியில் கடந்த 10ம்தேதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்ட துண்டு பிரசுரத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பெயர் மற்றும் படம் உரிய அனுமதியின்றி அச்சிடப்பட்டதாக கூறி அக்கட்சியினர் முற்றுகையிட்டு அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்தை தடுத்ததாக கடம்பன்குளத்தைச் சேர்ந்த தளவாய்ப்பாண்டி, சின்னத்துரை, கொம்பையா, ஜெகன் மற்றும் கல்லத்தியை சேர்ந்த சுடலைமுத்து ஆகிய 5 பேர் மீது நாங்குநேரி போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய செயலாளர் தளவாய்ப்பாண்டி நேற்று கைது செய்யப்பட்டார்.