×

புதுச்சேரி பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரி கரையாம்புத்தூரில் பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் 5 பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். பிற்பகலில் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. ஆலையின் 3 அறைகளும் தரைமட்டமாகின. இதில், 3 பெண்கள் உயிரிழந்தனர்.  உரிமையாளர் குணசுந்தரி, கலாமணி (45) ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில், நேற்று மதியம் குணசுந்தரி சிகிச்சை பலனின்றி  இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆனது.



Tags : fireworks factory accident ,Puducherry , Puducherry Fireworks Plant, Killed
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது