சென்னை: வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வை நடத்திய பிரதமருக்கு தமிழக சட்டப்பேரவையை கூட்டி, நன்றி தெரிவிக்கவேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமிழனின் பெருமையையும், தமிழகத்தின் பெருமையையும் எடுத்துக்காட்டி உள்ளார். இரு தலைவர்கள் சந்திப்பிற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த தமிழக அரசுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.