×

சீர்காழி அருகே கார்-லாரி மோதல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

சீர்காழி: மகனை வெளிநாடுக்கு வழியனுப்பி விட்டு சீர்காழி அருகே வந்த போது கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். திருவாரூர் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் சரவணன்  (42). துபாயில் வேலைபார்த்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர், நேற்றுமுன்தினம் மீண்டும் துபாய் புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் வழியனுப்புவதற்காக சரவணனின் தந்தை சோமசுந்தரம்(65), தாய் சாந்தி(60),  மனைவி சுமித்ரா(38), மகன் புவனேஸ்வரன்(14), உறவினர் அன்னபூரணி(60), இவரது மகன் செந்தில்குமார்(40),மகள் சாய்(8) ஆகியோர் காரில் சென்றனர். சரவணனை வழியனுப்பி வைத்துவிட்டு நேற்றுமுன்தினம் இரவு சென்னையில் இருந்து  காரில் ஊருக்கு திரும்பினர். காரை செந்தில்குமார் ஓட்டினார்.

நேற்று அதிகாலை நாகை மாவட்டம் சீர்காழி அருகே கோவில்பத்து புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பால்டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சோமசுந்தரம், சாந்தி, சுமித்ரா ஆகியோர் சம்பவ  இடத்திலேயே இறந்தனர். செந்தில்குமார், அன்னபூரணி, புவனேஸ்வரன், சாய் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 4 பேரையும் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Car-lorry collision ,Sirkazhi , Corporal, car-lorry, 3 killed
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!