×

பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருவதால் திருப்பதியில் 3 நாட்களுக்கு திவ்ய, சர்வ தரிசனம் ரத்து

திருமலை: திருப்பதி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருவதையொட்டி 3 நாட்களுக்கு திவ்ய, சர்வ தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 30ம் தேதி  முதல் 8ம் தேதி 9 நாட்கள் பிரமோற்சவம் கோலாகலமாக நடந்தது. இதைத்தொடர்ந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் வந்தபடி உள்ளனர். இதனால் தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக நேற்று முதல் நாளை வரை 3 நாட்களுக்கு மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசனம், ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் டோக்கன் பெறும்  சர்வ தரிசனம் ஆகியவற்றை ரத்து செய்வதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.



Tags : Divya ,Sarva Darshan ,devotees. ,Tirupati ,devotees , Devotees, Divya, Sarva Darshanam canceled, Rupati temple
× RELATED பாஜகவில் சேர அழைப்பு வந்தது உண்மைதான்;...