×

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சத்தியகோபால் நீர்வளம் மற்றும் ஆறுகள் புனரமைப்பு மேலாண் இயக்குநராக நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : வருவாய் நிர்வாக ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சத்தியகோபால் நீர்வளம் மற்றும் ஆறுகள் புனரமைப்பு திட்டத்தின் மேலாண் இயக்குநராக நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கை:

வருவாய் நிர்வாக ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சத்தியகோபால் கடந்தமாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழக அரசின் நீர்வளம் மற்றும் ஆறுகள் புனரமைப்பு திட்டத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பதவியேற்ற நாளில் இருந்து ஒரு வருடத்திற்கு இந்த பணியில் செயல்படுவார். மேலும் இவர் இந்த துறைகளின் செயல்பாடுகளையும், பொதுப்பணித்துறையில் உள்ள குடிமராமத்து பணிகளையும் கண்காணிப்பார். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Sathya Gopal ,Managing Director ,IAS officer ,Water Resources and Rivers Reconstruction Retired , Retired IAS officer ,Managing Director ,Sathiyagopal ,Water and Rivers Reconstruction
× RELATED கோடை காலத்தில் கறவை மாடுகளுக்கு தாது...