சென்னை: தமிழ்நாடு காவல்துறை காவலர்கள் சங்கத் தலைவர் நேற்று முன்தினம் காலை மரணமடைந்தார். தமிழ்நாடு காவல்துறையில் காவலர்களுக்கு சங்கம் நடத்த தமிழக அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், தற்போது சிந்தாதிரிப்பேட்டையில் எஸ்.ஐ.யாக இருந்த சிவக்குமார், தமிழ்நாடு காவல்துறை காவலர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை பதிவு செய்தார். பின்னர் சங்கத்தை நடத்த அனுமதி கேட்டு டிஜிபி, உள்துறைச் செயலாளர், முதல்வர் ஆகியோரிடம் மனு அளித்தார். பின்னர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நீதிமன்த்தில் நிலுவையில் உள்ளது. சங்கத்தை நடந்த அனுமதி கேட்டு தொடர்ந்து போராடி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சிவக்குமார் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.