×

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு குண்டு மிரட்டல்

சென்னை : சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை 10.30 மணியளவில் திடீரென ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய வாலிபர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறி இணைப்பை துண்டித்தார்.

இந்த எண்ணில் மறுபடி போலீசார் தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பெண் ஒருவர் எடுத்து பேசியுள்ளார். அவரிடம் விசாரித்தபோது, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (19) என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வார்டில் தங்கியிருந்த பெண் ஒருவரின் செல்போனை எடுத்து இந்த மிரட்டலை விடுத்துள்ளதும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Tags : Bombing ,Central Railway Station , Bombing , Central Railway Station
× RELATED மதுரை மாவட்டம் மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை!