×

அனைத்து கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: அனைத்து கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க பல்கலைக்கழக மானிய குழு முடிவு செய்துள்ளது. உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்  ஒருபகுதியாக மத்திய அரசின் நிதியுதவி பெரும் கல்லூரிகள் மட்டுமே தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார குழுமத்தின் அனுமதி பெறுவது தற்போது வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும்பாலான கல்லூரிகள் நாக் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன. இதனை மாற்றுவதற்காக அனைத்து கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் புதிய திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தவிர நிரந்தர இணைப்பு மட்டுமல்லாமல், தற்காலிக இணைப்பு பெற்று இயங்கும் கல்லூரிகளும் யுஜிசி வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி செயல்பட வேண்டும். இதை தொடர்ந்து, ஆய்வின் போது குறைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது மாணவர்கள் சேர்க்கைக்கு தடை உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வரைவு தொடர்பாக கல்வியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அக்டோபர் 21ம் தேதிக்குள் மின் அஞ்சலில் அனுப்ப வேண்டும் என்றும் கூடுதல் தகவல்களை www.ugc.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம் என்றும் யுஜிசி அறிவித்துள்ளது.


Tags : government ,colleges , All College, Knock Accreditation, Mandatory, Federal Government Decision
× RELATED நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி மருத்துவ இடங்களுக்கு கடும் போட்டி