சென்னை: சென்னை வந்த சீன அதிபருக்கு தமிழக ஆளுநர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபாலும் சீன அதிபரை வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக காரில் கிண்டி ஐ.டி.சி சோழா ஓட்டலுக்கு செல்கிறார். பின்னர் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.