பெய்ஜிங் : சென்னை மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஸீ ஜின்பிங் இடையிலான சந்திப்பு இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் என சீன ஊடகங்கள் கணித்துள்ளன. சீனாவின் முக்கிய ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் மோடி - ஸீ ஜின்பிங் சந்திப்பு குறித்த தகவல்களும் கட்டுரைகளும் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன. அதிகாரபூர்வமற்ற இந்த சந்திப்பு பொதுவாக இரு நாட்டு தலைவர்களுக்கும் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் சுதந்திரமாக கலந்துரையாடுவதற்கான சூழலை அமைத்து தரும் என்று தெரிவித்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள மோடி, ஜின்பிங் சந்திப்பும் இரு தரப்பு உறவுகளையும் மேம்படுத்தும் என்றும் இரு தரப்பு உறவுகள் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கு உதவும் என்று சீன பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.