தண்டையார்பேட்டை: உலக மனநல தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று மருத்துவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி, மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்திமலர் தலைமையில் நேற்று நடைபெற்றது. பேரணியில், மனநலம் குறித்த விழிப்புணர்வு வசனங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த பேரணி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் மருத்துவமனையில் முடிவடைந்தது. இதில், இதில், மனநல துறை தலைவர் அலெக்சாண்டர் ஞானதுரை, மருத்துவ கண்காணிப்பாளர் தனசேகர், நிலைய மருத்துவ அலுவலர் ரமேஷ் ஆகிய உட்பட மனநல துறை மருத்துவர்களும், செவிலியர்களும் கலந்து கொண்டனர்.