×

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: திருமாவளவன் உறுதி

சிதம்பரம்: ‘‘விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது. இதனால், தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்’’  என திருமாவளவன்  கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., சிதம்பரத்தில் கூறியதாவது: இந்திய பிரதமரும், சீன அதிபரும் தமிழக மண்ணில் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். இது இரு நாடுகளுக்கிடையோன சிக்கல்களுக்கு தீர்வு காண ஏதுவாக அமைய வேண்டும். கீழடியில் கண்டறியப்பட்டுள்ள தொல்லியல் சான்றுகள் தமிழ்  சமுதாயத்தின் தொன்மை நாகரிகத்தை உறுதிபடுத்தியுள்ளது.

5 கட்ட அகழாய்வுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்து அகழாய்வுகள் தொடர தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கென தனி நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்.  சிதம்பரம் பகுதியில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் அந்த நிதி கையாளப்படுவதாக கூறப்படுகிறது. கான்சாகிப் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களை தூர்வாரி பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது. விரைவில் இந்த இரு தொகுதிகளிலும் நான் பிரசாரம் செய்ய உள்ளேன். இந்த  இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி அபார வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : alliance ,DMK ,Thirumavalavan ,Vikravandi ,Nankuneri , Vikravandi, in Nankuneri, Thirumavalavan, confirmed
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி