×

வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கொள்ளை திட்டம் வகுத்த முருகன்: உரிமையாளரிடம் துருவி துருவி விசாரணை

திருச்சி: கொள்ைள கும்பல் தலைவன் முருகன், திருச்சியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி திட்டம் வகுத்தது தெரியவந்துள்ளது. வீட்டு உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருச்சி பிரபல நகைக்கடை கொள்ளையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. தனிப்படை போலீசார் விசாரணையில், திருச்சி திருவெறும்பூர் அருகே நறுங்குழல் நாயகிநகர் பகுதியில்  முருகன்  பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று முருகனின் வீட்டை சோதனையிட்டனர். ஆனால், முருகன் அங்கிருந்து கடந்த  1ம் தேதி வாடகை கொடுத்துவிட்டு சென்று உள்ளார். இதையடுத்து  வீட்டின் உரிமையாளர்  ஷேக்அப்துல்காதரை தனிப்படை போலீசார் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முருகன் தங்கியிருந்த வீட்டுக்கு போலீசார்  பூட்டு போட்டனர்.

முருகனை பற்றி அப்பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரத்தபோது, அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ரூ.60 ஆயிரம்  அட்வான்ஸ் கொடுத்து ரூ.4 ஆயிரம் மாத வாடகைக்கு வந்ததாகவும் இந்த வீட்டில் வைத்துதான்  கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. ேமலும் முருகனுடன் மஞ்சுளா என்ற  பெண், மாற்றுத்திறனாளி பெண் சவுமியா, 3 வயது  சிறுவன் ஆகியோர் தங்கி இருந்தனர் என்றும், ஆயுத பூஜையன்று முருகன் வீட்டில்  இருந்த பொருட்களை மூட்டை கட்டியுள்ளார். வேலைக்கார  பெண்ணுக்கு  மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் தந்ததோடு இனி வேலைக்கு வரவேண்டாம் என்று கூறி அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.உண்மையிலேயே முருகனுடன் தங்கியிருந்தது அவரது  மனைவி, மகன், மகளா அல்லது  அப்பகுதியினரை ஏமாற்ற முருகன் ஏற்படுத்திய  செட்டப் குடும்பமா என அவர்  சிக்கிய பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Tags : Murugan ,house ,robbery ,investigation ,owner ,Dhruvi Durvi , House ,stay, Murugan ,robbery, Dhruvi Durvi's,
× RELATED நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நிறைவு