×

2.91 லட்சம் பயணிகள் சென்னை திரும்பினர்

சென்னை : ஆயுதபூஜை தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சிரமமின்றி சென்னை திரும்பும் வகையில் 5,479 பேருந்துகள் இயக்கப்பட்டது. அதில் 2,91,830 பயணம் செய்துள்ளனர்.தமிழகத்தில் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் 7ம் தேதி ஆயுத பூைஜ, 8ம் தேதி விஜயதசமி என தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 2,490 பேருந்துகள் இயக்கப்பட்டது. இதன் மூலம் 1,41,930 பேர் சொந்த ஊருக்கு சென்றனர்.இந்நிலையில் பண்டிகை முடிந்து கடந்த இரண்டு நாளில் 5,479 பேருந்துகள் மூலம் 2,91,830 பயணிகள் சென்னை திரும்பினர்.


Tags : passengers ,Chennai , 2.91 lakh ,passengers ,Chennai
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்