சென்னை: தமிழகத்தில் கைது செய்யப்பட்ட திபெத்திய மாணவர்களை விடுதலை செய்யுமாறு திபெத்தியர் சங்கம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. சீன அதிபர், பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதையடுத்து திபெத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திபெத் மீது சீன கம்யூனிஸ்ட் அரசின் அத்துமீறிய செயல்களை கண்டிக்க திபெத்தியர்களுக்கு சட்டரீதியாக உரிமை உள்ளது.