விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 414 வெள்ளி நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாங்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி வாகனச் சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வாகனச் சோதனையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த முகேஷ்குமார் என்பவரிடம் இருந்து 414 வெள்ளி நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து கோவை சென்ற பேருந்தில் கைலேஷ் குமார் என்பவரிடம் இருந்து ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.