×

இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து: பீகார் போலீஸ் அறிவிப்பு

பீகார்: இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து என்று பீகார் போலீஸ் அறிவித்துள்ளது. இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான புகார் பொய்யானது என்று பீகார் போலீஸ் விளக்கமளித்துள்ளது. புகாருக்கு உரிய ஆதாரங்களை தாக்கல் செய்ய புகார்தாரர் தவறிவிட்டார் என்று போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. பொய் புகார் அளித்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் பீகார் மாநில போலீஸ் தகவல் அளித்துள்ளது.

Tags : persons ,Maniratnam ,Bihar , Bihar, Mani Ratnam, Case
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது