மதுரை: வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 1,130 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி ஆட்சியர் பல்லவிபல்தேவ் மற்றும் மதுரை ஆட்சியர் செல்வராஜ் ஆகியோர் நீர் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். வைகை அணையில் நீர் திறக்கப்பட்டு உள்ளதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.