ராமேஸ்வரம்: பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் நடத்திய அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய, இலங்கை சிறையில் உள்ள இருநாட்டு மீனவர்களை விடுவிக்க கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வரும்போது நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க கோரிக்கை வலியுறுத்தப்பட்டு்ளளது. படகுகளை விடுவிக்க நடவடிக்கை கோரி 11-ம் தேதி உண்ணாவிரதம் இருக்க மீனவர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.