×

மரக்கடையில் தீ விபத்து

பெரம்பூர்: பெரம்பூர் அடுத்த ஓட்டேரி, சச்சிதானந்தன் தெருவை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (75). ஓட்டேரி, வெங்கடேச பக்தன் தெரு பகுதியில் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 3 மணிக்கு மரக்கடையில் இருந்து புகை வந்துள்ளது.  தகவலறிந்து கீழ்ப்பாக்கம், செம்பியம், வியாசர்பாடி, பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 10 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் இருந்த மரக்கட்டைகள், விறகுகள் எரிந்து சேதமானது.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மரக்கடைக்கு யாராவது தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவு காரணமாக தீ பிடித்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : woods , Fire , woods
× RELATED காடுவெட்டியில் பதற்றம்; குரு மகன்,...