×

சென்னைக்கு ரயில் தண்ணீர் நிறுத்தம்

ஜோலார்பேட்டை: சென்னையில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து கடந்த ஜூலை 12ம் தேதி முதல் ரயிலில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. ஜூலை 23ல் இருந்து கூடுதலாக 2வது ரயில் மூலம் 25 லட்சம் லிட்டர் என தினசரி 50 லட்சம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பணி  நேற்றுடன் 159வது முறையாக என சுமார் 40 கோடி லிட்டர் தண்ணீர் வந்துள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து பெய்த மழை, கிருஷ்ணா நதி நீர் வரத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும்  ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் குடிநீர் தட்டுப்பாடு குறைந்தது. இதையடுத்து,  ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Chennai ,Chennai Rail , Chennai ,Rail water stoped
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...