×

செங்கோட்டை அருகே 12 அடி நீளமுள்ள ராஜநாகம் பிடிபட்டது

செங்கோட்டை: புளியரை பகவதிபுரத்தில் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் பிடிபட்டது. செங்கோட்டை அடுத்த புளியரை பகவதிபுரத்தில் ராஜநாகம் ஒன்று சாலையோரம் உள்ள ஓடையில் பதுங்கியிருந்தது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள்   செங்கோட்டை  தீயணைப்பு நிலையத்திற்கும், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை  பிடித்தனர். பின்னர் அதனை கற்குடி அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.


Tags : Sengottai ,kingpin , A 12-foot-tall kingpin was caught near Sengottai
× RELATED பறவை காய்ச்சல் எதிரொலி தமிழக-கேரள...