சென்னை: ராயபுரத்தை பசுமை ராயபுரமாக மாற்றும் வகையில் 10,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. மரங்கள் அதிகமாக இருந்தால்தான் வன உயிரினங்களைக் காக்க முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மரக்கன்றுகளை நடும் பணியில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.