சென்னை: 50 பேருக்கு எதிரான தேசதுரோக வழக்கினை திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கலைஞர்கள் தங்கள் கருத்தை திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்யவேண்டும், பொதுவெளியில் பேசக் கூடாது என்று அச்சுறுத்துவது ஏற்கத்தக்கதல்ல என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.