டெல்லி: இந்திய விமானப்படை தினத்தையொட்டி டெல்லியில் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர். ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோர் மரியாதை செலுத்தினர். போரில் நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களின் நினைவாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.