×

பாம்பு என்றால் படையே நடுங்கும் 5அடி நாகத்தை துணிச்சலாக பிடித்த வாலிபர்

சீர்காழி : நாகை மாவட்டம் சீர்காழி தென் பாதியில் வசிப்பவர் மயில்வாகனம் (55). இவரது மாடி வீட்டில் நேற்று காலை 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு, எலியை பிடித்து விழுங்கி கொண்டிருந்தது. இதனை அறிந்த வீட்டில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே பாம்பு பிடிப்பதில் வல்லவரான பாண்டியனுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பாண்டியனின் மகன் பிரசாந்த் (22) சம்பவ இடத்திற்கு சென்று பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். பாம்பு என்றால் படையை நடங்கும். ஆனால் 5 அடி நாகத்தை துணிச்சலாக பிடித்த வாலிபரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாராட்டி சென்றனர்.

Tags : youngster ,Sirkali , sirkali,Snake , without fear, snake,sirkali
× RELATED உயிருடன் மீனை விழுங்கிய வாலிபர்...