×

பாம்பாற்றில் செல்பி நீரில் மூழ்கி புதுப்பெண் உள்பட 4 பேர் பரிதாப சாவு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்தவர் கோவிந்தன். ஜவுளி வியாபாரியான இவரது மகன் பெருமாள்சாமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வேலுமணி மகள் நிவேதா(20) என்பவருக்கும் கடந்த மாதம் 12ம் தேதி திருமணம் நடைபெற்றது.நேற்று ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி ஒட்டப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் இளங்கோவன் என்பவரின் வீட்டிற்கு, விருந்துக்கு வந்திருந்தனர். மதியம் இருவரும் வெளியே புறப்பட்டனர்.

அவர்களுடன் இளங்கோவனின் மகள்கள் சினேகா(19), கனிகா(18), மகன் சந்தோஷ்(14) மற்றும் உறவினரான மணிவண்ணன் மகள் யுவராணி(20) ஆகியோரும் சென்றனர். ஊத்தங்கரையில் 6 பேரும் சினிமா பார்த்த பின்னர், ஊத்தங்கரை பாம்பாறு அணையை சுற்றிப்பார்க்க புறப்பட்டனர்.  ஆற்றங்கரையில் செல்பி எடுக்கலாம் என சந்தோஷ் தண்ணீரில் இறங்கி மூழ்கினான். அவனை காப்பாற்றுவதற்காக இறங்கி அடுத்தடுத்து 5 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதில்  நிவேதா மற்றும் சந்தோஷ், அவரது சகோதரிகள் என 4 பேரும் பலியாகினர்.

Tags : Newbies , Bombay, water Including newbies,
× RELATED கண்ணடித்து முத்தமிட்ட புதுதோழிகள்