×

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை பாயும்: போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

சென்னை: போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான பொதுமக்கள் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றிற்கு பூஜைகள் செய்து திருஷ்டி பூசணிக்காய்கள் உடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பல சமயங்களில், சாலைகளின் நடுவே திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்து அப்படியே விட்டு செல்வதால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துக்கள் ஏற்படுவதும் அவ்வாற்று விழும் பொழுது பின்னால் வரும் வாகனங்கள் அவர்கள் மீது மோதி ஆபத்து ஏற்படுகிறது.

எனவே, பொதுமக்கள் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் திருஷ்டி பூசணிக்காய்களை உடைக்க வேண்டாம் எனவும், பாதுகாப்பான முறையில் தங்களது பூஜைகளை செய்யவும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags : Traffic cop ,occasion , occasion , Armed Pooja,pumpkin breaks
× RELATED திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை...