×

பஸ்சில் சென்றபோது போலீஸ் சுற்றி வளைத்ததால் துப்பாக்கியால் சுட்டு ‘டிக் டாக் வில்லன்’ தற்கொலை: உபி.யில் 3 கொலை செய்தவன்

பிஜ்னார்: உத்தரப்பிரதேசத்தில் ஐந்தே நாளில் அடுத்தடுத்து 3 கொலைகளை செய்த ‘டிக் டாக் வில்லன்’ அஸ்வினி குமாரை போலீசார் சுற்றி வளைத்ததால், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பிஜ்னார் பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி குமார் (30). இவர் டிக் டாக்கில் ‘ஜானி தாதா’ என்ற பெயரில் தன்னை வில்லன் என கூறிக் கொண்டு வீடியோவை பதிவிட்டு பிரபலமானவர். போதை பழக்கத்தால் மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இவர், சமீபத்தில் பாஜ நிர்வாகியின் 25 வயது மகன், அவரது மாமா மற்றும் ஒரு சிறுமி என 5 நாளில் 3 கொலைகளை அடுத்தடுத்து செய்து பீதியை கிளப்பினார்.

எந்த குற்ற வழக்கிலும் சிக்காத அவர் 3 கொலை செய்தது பரபரப்பானது. போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அஸ்வினி குமார் நேற்று முன்தினம் அதிகாலை டெல்லி செல்லும் பஸ்சில் செல்வதாக தகவல் கிடைத்தது. உடனே, வேகமாக செயல்பட்ட போலீசார் அந்த பஸ்சை சுற்றி வளைத்தனர். இதனால் தப்பிக்க முடியாது என்பதால் அஸ்வினி குமார், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பஸ்சில் இந்த சம்பவம் நடந்ததால், பயணிகள் பீதியில் அலறினர்.சம்பவ இடத்திலேயே அஸ்வினி குமார் இறந்துள்ளார். அவர் செய்த 3 கொலைகள் தொடர்பாக 14 பக்கங்களுக்கு அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் கைப்பற்றப்பட்டு உள்ளதாக போலீசார் கூறி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Dick Dog ,suicide ,villain ,UP , Tic Tac, Villain Suicide, 3 murdered , UP
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை