×

தர்மபுரி செந்தில்நகரில் வீணாகும் குடிநீர்

தர்மபுரி: தர்மபுரி  செந்தில்நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து  வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு தேவையான ஒகேனக்கல் குடிநீர் வழங்க  மேல்நிலை தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டிக்கு செல்லும்  ஒகேனக்கல் குடிநீர் குழாயில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடைப்பு  ஏற்பட்டது. இதனால் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் செல்லும் போது உடைப்பு  ஏற்பட்டுள்ள குழாயில் குடிநீர் தினமும் வீணாகி வருகிறது. இதுகுறித்து  செந்தில் நகர், காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற  அலுவலகத்தில் புகார் செய்தனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை.

இதனால் ஒகேனக்கல் குடிநீர் கசிந்து செல்லும் இடத்தில்  பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்வதற்கு கடும்  சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் வீணாகி செல்வதை தடுக்க உடனடியாக குடிநீர்  வடிகால் வாரிய நிர்வாகம் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய  வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Senthilnagar ,Dharmapuri , Dharmapuri, waste water
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...