×

காஷ்மீர் மக்களுக்கு உதவும் நோக்குடன் எல்லையை கடக்க வேண்டாம்: பாகிஸ்தானியர்களுக்கு இம்ரான் எச்சரிக்கை

இஸ்‌லாமாபாத்: `காஷ்மீர் மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் எல்லைப் பகுதியை கடக்க வேண்டாம்’ என்று ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் வாழும் பாகிஸ்தானியர்களை பிரதமர் இம்ரான்கான் எச்சரித்துள்ளார்.காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நீக்கப்பட்ட பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியா உடனான தூதரக உறவை முறித்து கொண்ட பாகிஸ்தான், இந்திய தூதரை திருப்பி அனுப்பியது. காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. ஆனால், `இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. பாகிஸ்தான் உண்மையை உணர வேண்டும்.

இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்’ என இந்தியா, பாகிஸ்தானை எச்சரித்தது. மேலும், இது தொடர்பாக பாகிஸ்தான் விடுக்கும் அறிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.இந்நிலையில், பிரதமர் இம்ரான்கான் தனது நேற்றைய டிவிட்டர் பதிவில், ``ஜம்மு காஷ்மீரில் நமது சகோதரர்கள் சந்திக்கும் அவஸ்தை, கஷ்டங்களை நினைத்து ஆக்ரமிப்பு காஷ்மீர் மக்கள் படும் வேதனையை அறிவேன். ஆனால் அவர்களுக்கு ஆதரவாக உதவி செய்யும் நோக்கத்துடன் நீங்கள் எல்லை பகுதியை கடந்தால், இந்திய ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டு துன்புற நேரிடும்’’ என்று எச்சரித்துள்ளார்.



Tags : Kashmir Imran ,Pakistanis ,border ,Kashmiris , helping ,people ,Kashmir, Imran warns, Pakistanis
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...